அண்ணியுடன் கள்ளக் காதல்.. அண்ணனை விருந்துக்கு அழைத்த தம்பி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!!

18425

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சித்தேரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார்.

இந்த நிலையில் நேற்று இரவில் வெளியே சென்றுவருவதாக கிளம்பிய விக்னேஷ், அதன் பிறகு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் சித்தேரி மாந்தோப்பு பகுதியிலுள்ள கிணற்றுக்கு அருகில் விக்னேஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

விக்னேஷின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளிகள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.


போலீஸ் விசாரணையில் விக்னேஷ் சிகரெட் பிடிக்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக ஒரே விஷயத்தை யாமினி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். மேலும், அவர் நடவடிக்கையும் சந்தேகப்படும்படியாக இருந்ததால் யாமினி மீது பார்வையை திருப்பிய போலீசார், அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

அதில், கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்தது, கொலையை செய்தது விக்னேஷின் தம்பி சதீஷ் என்பது தெரியவந்தது. மேலும், பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.

விக்னேஷின் சித்தி மகனான தம்பி முறை கொண்ட சதீஷ், சித்தேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அருகிலுள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அண்ணன் விக்னேஷ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது யாமினுக்கும் சதீஷுக்கும் நட்பு ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக் காதலை தொடர்ந்து வந்தனர். தம்பி என்ற நம்பிக்கையில் அவர் வீட்டுக்கு வருவதை விக்னேஷ் சந்தேகப்படவில்லை.

இதனிடையே தங்களது கள்ளக் காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருக்கிறார் என நினைத்த யாமினியும் சதீஷும் அவரை கொலை செய்துவிட்டு சந்தோஷமாக வாழ முடிவு செய்தனர்.

அந்த சமயத்திற்காக காத்திருந்தபோதுதான் விக்னேஷுக்கு செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று பிறந்தநாள் வந்தது. இதுதான் சமயம் என்று முடிவு செய்த சதீஷ், விக்னேஷ் வீட்டிற்கு நேற்றிரவு சென்று பிறந்தநாளுக்கு மது விருந்து தருவதாகக் கூறியுள்ளார்.

தனக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டுள்ளது தெரியாத விக்னேஷ், தம்பி அன்போடு அழைக்கிறானே என்று அங்கு சென்றுள்ளார். இருவரும் மது அருந்திய நிலையில், விக்னேஷுக்கு போதை தலைக்கேறியது உனக்கு பிறந்தநாள் சர்பிரைஸ் தருகிறேன் எனக் கூறி கண்களை துணியால் கட்டியுள்ளார்.

தம்பி பரிசு தருகிறான் என்று ஆசையோடு விக்னேஷ் காத்திருக்க, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தான் சதீஷ். இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். பின்னர் சாவகாசமாக வீட்டிற்கு சென்று தூங்கிவிட்டுவிட்டார் சதீஷ்.

 காலையில் ஒன்றும் தெரியாதது போல சடலம் அருகே நின்று என்ன நடந்தது என விசாரித்துள்ளார். உண்மை வெளிவந்த நிலையில் யாமினி, சதீஷ் என இருவரையும் கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன் மனைவியுடனான கள்ளக்காதலுக்காக அண்ணனையே தம்பி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.