அந்த நாயை தூக்கில் போடுங்க.. இல்ல நானே சுட்டு தள்ளிருவேன்.. சிறுமியை சிதைத்தவனின் தந்தை பேட்டி!!

4164

மத்திய பிரதேசத்தில்..

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

காமக்கொடூரனால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர், தனது பிறப்புறுப்பில் ரத்தம் வழிய வழிய அங்கு வீடு வீடாக சென்று உதவி கேட்பதும், ஆனால் யாருமே அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வராததும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதாக இருந்தது.

இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், அந்த சிறுமி வீட்டிற்கு வழிதெரியாமல் தவறி வந்ததும், இதை பயன்படுத்தி ஒரு காமக்கொடூரன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, ஒரு ஆட்டோவில் அந்த சிறுமி ஏறுவதும், பின்னர் வேறொரு இடத்தில் அந்த சிறுமி ஆட்டோவில் இருந்து தள்ளவிடப்படுவதும் பதிவாகி இருந்தது.


இதையடுத்து, அந்த ஆட்டோ எண்ணை கொண்டு ட்ரேஸ் செய்ததில் அதன் உரிமையாளர் பாரத் சோனி (24) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவனை கைது செய்தனர். இந்நிலையில், அவனது தந்தை ராஜு சோனி செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அவர் கூறுகையில், “இந்த கொடூரக் குற்றத்தை அவன் செய்திருக்கிறான் என்று தெரி்த உடனேயே போலீஸார் அவனை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அவனுக்கு சாவை தவிர வேறு எந்த தண்டனையும் கொடுக்கக் கூடாது.

இவனை எல்லாம் வேறு என்ன செய்ய முடியும்? இவனை போன்ற ஆட்களை தூக்கில் தொங்கவிட்டால் தான், மற்றவர்களுக்கு பயம் பிறக்கும். இந்த சம்பவம் பற்றி தொலைக்காட்சி செய்திகளில் ஓடிக்கொண்டிருந்த போது,

அவனும் என்னுடன் சேர்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நாய் தான் அந்தக் கொடூரத்தை செய்திருக்கிறான் என்று அப்போது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே அவனை சுட்டிருப்பேன்.

இப்போதும் ஒன்று கெட்டுப்போகவில்லை. அந்த நாயை தூக்கில் போடுங்கள். இல்லையென்றால் நானே அவனை சுட்டுத் தள்ளிவிடுவேன். இவன் எல்லாம் உயிருடன் இருப்பதே அவமானம்” என்று ராஜு சோனி கண்ணீருடன் கூறினார்.