“அவளை டார்ச்சர் செய்தான்.. கொன்று விட்டேன்..” பெண் சகவாசத்தால் சக தொழிலாளி அடித்து கொலை..!!

94

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண் சகவாச விவகாரத்தில் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளி அடித்தே கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் கருப்பையா. இவர் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் செல்லபாண்டி என்ற மற்றொரு தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்து காயப்படுத்தியதாக கம்பெனியின் சூப்ரவைசர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களாக ஒரு பெண்ணிடம் போனில் பேசுவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கருப்பையாவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லபாண்டி சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் தலைமறைவான கருப்பையாவை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கொலை செய்யப்பட்ட செல்லப்பாண்டியின் சொந்த ஊர் மதுரை. இவர் அலுமினிய பாத்திரங்களை செய்யும் வேலை செய்து வந்தார்.

கைது செய்யப்பட்ட கருப்பையாவின் சொந்த ஊர் மணப்பாறை. இவர் அலுமினியங்களை உருக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.


ந்நிலையில்தான், கருப்பையாவுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி வந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் கருப்பையாவின் செல்போன் பழுதானது.அதனால் செல்லப்பாண்டியின் செல்போனை வாங்கி அதன் மூலம் அந்தப் பெண்ணுடன் கருப்பையா பேசி வந்திருக்கிறார்.

அடிக்கடி தனது போனில் பேசும் பெண் யார்? என செல்லபாண்டியும் அந்த பெண்ணுக்கு போன் செய்து பேச ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணுடன் செல்லப்பாண்டியும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா, “அடிக்கடி போன் செய்து அவளை டார்ச்சர் செய்யாதே” என செல்லபாண்டியை கடுமையாக எச்சரித்துள்ளார்.ஆனால் அதனை ஒரு பொருட்டாக நினைக்காத செல்லபாண்டி தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசி  வந்திருக்கிறார்.

பல முறை சொல்லியும் கேட்காததால் சம்பவத்தன்று உருட்டுக்கட்டையை எடுத்து மண்டையை பிளந்திருக்கிறார் கருப்பையா. இதில் படுகாயமடைந்த செல்லபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.