ஆற்றில் மூழ்கி அக்காவும், தங்கையும் ஒன்றாக பலியான சோகம்!!

53

தங்களது மூத்த சகோதரியைப் பார்க்க சென்ற இடத்தில், ஆற்றில் குளித்து அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பலியானார்கள். இளம்பெண்கள் இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த கிராமத்தினரை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கேரள மாநிலம், வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடி அலவி என்பவரின் மகள்களான முபாஷிரா ( 26) மற்றும் அஜ்மலா தஸ்னி (21) ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரிவித்தனர்.

வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடியைச் சேர்ந்தவர் அலவி. இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மலப்புரத்தில் இருக்கும் திருமணமான தங்களது சகோதரியின் வீட்டிற்கு முபாஷிராவும், அஜ்மலா தஸ்னியும் சென்றுள்ளனர்.

தங்கள் மூத்த சகோதரியின் வீட்டிற்கு அருகில் உள்ள கடலுண்டி ஆற்றுக்கு குளிக்க இருவரும் சென்றிருந்த நிலையில், ஆற்றில் மூழ்கியுள்ளனர். இளம்பெண் இருவர் நீரில் மூழ்கி கூச்சலிடுவதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும்,

இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்களது உடல்கள் மலப்புரம் அரசு தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சகோதரி வீட்டிற்கு வந்திருந்த அக்கா-தங்கை இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.