இந்தியா விலகியவுடன்…. ரஷ்யாவுடன் ஒன்று கூடிய இரண்டு நாடுகள்: வெளிவரும் முக்கிய தகவல்!!

318

ரஷ்யாவுடன் ஆன கூட்டு இராணுவப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீனா அப்பயிற்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இராணுவமும் பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் படி கவ்காஷ் 2020 என்ற கூட்டு இராணுவப் பயிற்சியில் ரஷ்யா மற்றும் வேறொரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த பயிற்சியை தவிர்ப்பதாக இந்திய இராணுவத்துறை அறிவித்தது. அதுமட்டுமின்றி, மேலும் சில சர்வதேச கூட்டுப்பயிற்சிகளை இந்திய இராணுவம் கைவிட்டது.


தற்போது இந்தியா, ரஷ்யாவுடனான கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்திய விலகியதை தொடர்ந்து கவ்காஷ் 2020 கூட்டுப் பயிற்சியில் ரஷ்யாவுடன் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடனான மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத காரணத்தினால் கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன.

அத்துடன் லடாக் எல்லையில் 4 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் வரை பாதுகாப்பை இந்தியா பலப்படுத்த முடிவு செய்திருப்பதால், இராணுவ வீரர்களை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.