இன்றைய ராசிபலன் (15.12.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

86

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக அமையும். நீங்கள் நினைத்த வேலை நல்லபடியாக முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். கோவிலுக்கு சென்று இறை ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கடன் சுமை குறையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். எதிர்பார்த்து ஏமாற மாட்டீர்கள். கைநிறைய பணம், மனது நிறைய சந்தோஷம் என்று உங்களுடைய வாழ்க்கை இன்று நிறைவாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தின் எதிர்பாராத வாய்ப்பு பெரிய லாபத்தை கொட்டி தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய திறமைகளை நாலு பேர் பாராட்டும் அளவுக்கு வெளிப்படும். இதனால் வாழ்க்கையில் எதிர்காலத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டு பயணம் வெற்றியை கொடுக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுப்பீர்கள். மனநிறைவோடு இன்றைய நாள் நகர்ந்து செல்லும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும் பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசோர்வு நிறைந்த நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அதிக ஈடுபாடு இருக்காது. கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இன்றைய வேலையை நாளைக்கு தள்ளிப் போடாதீங்க. பிறகு நாளைக்கான வேலை இரட்டிப்பாகிவிடும் ஜாக்கிரதை.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எதிலும் அலட்சியம் கூடாது. புதிய முயற்சிகள் வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். இன்று வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதிக வேலை இருந்தாலும், குடும்பத்தையும் ஒரு கண் பார்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மை நடக்கும். காலையில் கொஞ்சம் மூட் அவுட்டோடு தான் உங்களுடைய நாள் தொடங்கும். ஆனால், மதியத்திற்கு மேலாக உங்களுடைய நிலைமை மாறி இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். மாலை நேரத்தை சந்தோஷத்தோடு குடும்பத்தோடு செலவு செய்வீர்கள். வராத சந்தோஷம் வந்து உங்களை உற்சாகப்படுத்து விடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். யாராவது உங்களை பேசி ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இப்போதுதான் பழக்கம், நேற்று தெரியும், இன்றைக்கு தெரியும் என்ற ஒரு புது மனிதரிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது ஜாக்கிரதை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பெரிய அளவில் எந்த ஒரு தொழிலிலும் முதலீடு செய்யாதீங்க. சூதாட்டம் வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கவும். அடம்பிடித்து எதையும் சாதிக்க வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக நீங்கள் சின்ன பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவிப்பீர்கள். யார் பக்கம் பேசுவது என்று தெரியாது. இக்கட்டான சூழ்நிலை வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. உதாரணத்திற்கு மனைவிக்கும் அம்மாவுக்கும் சண்டை, இரண்டு நண்பர்களுக்குள் சண்டை, இடையே நீங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. இருந்தாலும் அன்றாட வேலையை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பீர்கள். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள கொஞ்ச நேரம் பிடித்த பாட்டை கேளுங்கள். நகைச்சுவையான விஷயங்களை கைப்பேசியில் பாருங்கள். மனதை ரிலாக்ஸா வச்சுக்கோங்க நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் நிறைய இருக்கும். எந்த வேலையை செய்வது என்றே தெரியாது. 24 மணி நேரம் போதாது. அந்த அளவுக்கு பிசியா இருப்பீங்க. பொறுப்பான வேலைகளை செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் தொல்லையிலிருந்து விடுபட்டு மனநிறைவோடு நல்லா தூங்குவீங்க.