இரண்டாம் திருமணத்திற்கு தயாரான நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

50

ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது. ஆனால் ரச்சிதா தந்தை மரணத்திற்கு பின் தினேஷுடன் சேர மறுத்து வருகிறார்.

தினேஷ் டாப் 5 இடத்தினை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். உள்ளே போகும் போது எப்படியாவது என் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறியிருந்தார். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்தப்பின்னும் அவர் மாறவில்லை, அடுத்தக்கட்ட வாழ்க்கையை பார்க்க போவதாக தினேஷ் மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.


இந்நிலையில் நடிகை ரச்சிதா பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது நடிகை ரச்சிதா, பிரபல இயக்குனர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆண்களுக்கு எதிராக சமீபகாலமாக ரச்சிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவு செய்து வருகிறார். கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா இரண்டாம் திருமணம் செய்து கொள்வாரா அல்லது இது பொய்யான தகவலா? என்று ரச்சிதா இதற்கு பதிலளித்தால் தான் என்ன நடக்கும் என்று தெரியவரும்.