இரு குழந்தைகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயன்று தாய் தீக்குளித்து தற்கொலை!!

88

பட்டாம்பி அருகே வல்லப்புழாவைச் சேர்ந்தவர் பிரதீப் (40). இவர், வடகராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பீனா (35).

இவர்களுக்கு நிகா (12), நிவேதா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று காலை பீனா கணவருடன் போனில் பேசியுள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் பீனா மற்றும் 2 குழந்தைகள் மூவரும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் மேல்மாடியில் கரும்புகை எழும்புவதைப் பார்த்த பொதுமக்கள் பட்டாம்பி தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர்.

உடனடியாக விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து மூவரையும் மீட்டு பட்டாம்பி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பீனா (35) பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து 2 பெண் குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பட்டாம்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்தது போலீசாரிடம் கிடைத்துள்ளது. கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.