இரு மனைவிகளை கைவிட்டு பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜிம் மாஸ்டர் : குழந்தையுடன் மீட்கப்பட்ட மாணவி!!

630

திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், தருமபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மனுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தருமபுரி வந்தார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றார்.


இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு (habeas corpus) மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி தருமபுரி நகர கா.வல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் மாணவியின் சமூகவலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். மேலும், நரசிம்மனின் செல்போன் எண்ணை கொண்டு அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஷ்ணாபூரில் ஜிம் மாஸ்டர் நரசிம்மனை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பள்ளி மாணவியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே அவர் கடத்திச்சென்றது தெரியவந்தது.

மேலும், ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததும், தற்போது மாணவிக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நரசிம்மனை காவல்துறையினர் கைது செய்தனர்.

தெலுங்கானாவில் இருந்த மாணவி மற்றும் அவரது 8 மாத குழந்தையை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

பள்ளி சிறுமியை முகநூல் மூலம் பழகி கடத்தி சென்று இஷ்டம் போல உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்த வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.