உயிரிழந்த சிறுமியை வீதியில் தூக்கி வீசிய மருத்துவமனை.. கதறி துடிக்கும் பெற்றோர்… அதிர்ச்சி வீடியோ!!

468

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் கர்ஹால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது அவருக்கு அங்கிருந்த மருத்துவர் சிறுமிக்கு ஊசி போட்டார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்து விட்டார்.

உயிர் மிக மோசமான நிலையை எட்டவே வேறு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் படி கூறியுள்ளனர் மருத்துவர்கள்.உறவினர்கள், ‘எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்’ என அழுதுகொண்டே கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அவர்களை வெளியேறச் சொல்லி வற்புறுத்தியது. இந்த நேரத்திற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வரவழைக்கவில்லை. வெளியே இருந்த இருசக்கர வாகனத்தில் அமரவைத்து விட்டு சென்றுவிட்டனர். தாயும், தந்தையும் கதறி துடிக்கின்றனர்.


மருத்துவமனையில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொடூர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.