
வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து, அவர்களது அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து, தலைகீழாக தொங்கவிட்டு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சித்ரவதை செய்த இளம்பெண்ணை அவரது கணவருடன் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ்(29). இவருடைய மனைவி ரஷ்மி(23). இவருக்கு ஆலப்புழையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த வாலிபரிடம், நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக் கூறி ரஷ்மி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர், கடந்த 1ம் தேதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர், ரஷ்மியிடம் நெருங்கி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் ஜெயேஷ், தனது மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.6,000 பணத்தைப் பறித்தனர். அதனைத் தொடர்ந்து வாலிபரின் கைகளை கட்டித் தலைக்கீழாக தொங்கவிட்டு,
அவரது மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவரது கை விரல் நகங்களை பிடுங்கி உள்ளனர்.
இதில் வலி தாங்கமுடியாமல் அவர் அலறிய நிலையில், அவரது வாயை துணியால் கட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு போட்டு விட்டு, அங்கிருந்து சென்றனர். அந்த வழியாக சென்ற ஒருவர், வாலிபரின் முனகல் சத்தம் கேட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரன்மூளா போலீசார், வாலிபர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி, ஜெயேஷ், அவரது மனைவி ரஷ்மியை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாணையில், “பணத்துக்காக ரஷ்மி வாலிபர்களை குறி வைத்து முதலில் ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து பணம், செல்போன் உள்னிட்டவற்றை பறித்துள்ளார்.
மனைவிக்கு உடந்தையாக ஜெயேஷ் இருந்துள்ளார். கடந்த 5ம் தேதி ஓணம் விழா தினத்தில் தன்னுடன் வேலைப் பார்த்து
வந்த ஒரு வாலிபரையும் ரஷ்மி வீட்டிற்கு அழைத்து அவரிடம் இருந்தும் பணத்தை பறித்து கட்டி தொங்க விட்டு சித்ரவதை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஆரன்முளா போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.















