எத்தனை ரெக்கார்டு நோட்டுதான் எழுதுறது.. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

65

ரெக்கார்டு நோட்டுகளை அதிக அளவில் எழுதக் கொடுத்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள சொக்கநாதன்பேட்டை வடக்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கிருஷ்ணசூர்யா (18) என்ற மகளும், 15 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.

இதில் கிருஷ்ணசூர்யா, ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கிலம் பிஏ பிஎட் முதலாமாண்டு படித்து வந்தார். இதனிடையே, கல்லூரியில் தினமும் அதிக அளவில் ரெக்கார்டு நோட்டுகளை பேராசிரியர்கள் எழுத சொல்வதாக கிருஷ்ணபிரியா அடிக்கடி பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்தாராம்.

இதையடுத்து, அடுத்த வருடம் வேறு கல்லூரியில் சேர்த்து விடுவதாக அவரது பெற்றோர் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் மாடியில் ரெக்கார்டு நோட்டுகளை எழுதி வந்த கிருஷ்ணபிரியாவுக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து அவரது உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.