எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ளக்காதல்.. கடுப்பான லாரி ஓட்டுநர்.. இறுதியில் நடந்த சோகம்!!

142

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணியளவில் கே.என்.ஜி.புதூர் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெய்கணேசை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லாரி டிரைவர் சாமிநாதன் (45) என்பவரின் மனைவிக்கும், இறந்த ஜெய்கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த சாமிநாதன் இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆனால், இதனை பெரிதாக கொடுத்துள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த சாமிநாதன் ஜெய்கணேசை கொலை செய்ய திட்டமிட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள சாமிநாதனை தேடி வருகின்றனர்.