ஒற்றை தலையுடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்! கடும் அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!!

377

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஒற்றை தலையுடன் பாம்பு போல ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிறந்த ஆண் குழந்தைகள் மருத்துவர்களையும் மிரள வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி பேறுகாலத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத்தான், அதிசய ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுகப்பிரசவம் செய்ய முயற்சித்த நிலையில் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது, சுஷாந்திக்கு பிறந்தது 2 ஆண் குழந்தைகளாம்.


இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வியந்து போனார்கள். பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள் நான்கு கைகள் தனித்தனியே இருந்த நிலையில், தலை மட்டும் ஒன்றாக இருந்தது மருத்துவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.