
இந்தியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 நாட்களுக்கு பின் 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் லால் கேட் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துள்ளானது.

இந்த விபத்து காரணமாக இடிபாடுகளுக்கிடையே குடியிருப்பாளர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் அப்பகுதிக்கு உடனடியாக தேசியபேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர்.

அங்கு இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், லால் கேட் பகுதிக்கு அருகே உள்ள கட்டிட இடிபாட்டில் சிக்கி இருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
இதனால் அங்குள்ளவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை 7 பேர் கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இடிபாடுகளில் சிக்கியர்வர்களை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















