கணவர், இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற மருத்துவர்: சிக்கிய தற்கொலை கடிதம்!!

347

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவரான 41 வயது சுஷ்மா ரானே.

இவரது கணவர் தீரஜ் (42), பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 11 வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுடன் மருத்துவரின் உறவினர் 60 வயதான பெண்மணி ஒருவரும் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் காலையில் எழுந்து படுக்கை அறையை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் அவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.


தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குடியிருப்பின் உள்ளே சென்று பார்க்கும்போது,

படுக்கையில் தீரஜ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த நிலையில், மருத்துவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சுஷ்மா ரானே தனது தற்கொலை கடிதத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமாக இல்லாத காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் அறையில் இரண்டு மருந்தேற்றும் ஊசி கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று பேருக்கும் மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துவிட்டு, அதன்பின் விஷ ஊசியை செலுத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே மூன்று பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.