கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. மகன் கண்முன்னே தாய்க்கு நடந்த விபரீதம்!!

6334

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், போலீஸ் கான்ஸ்டபிளான உயர் நீதிமன்றத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி. 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ராஜ்குமாருக்கும் மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

அதாவது, காவலர் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் சண்டை போட்டு விவாகரத்து கேட்டு வற்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் இரு வீட்டாரும் தலையிட்டு சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இருப்பினும் கணவர் ராஜ்குமார் மனைவி ஷோபனாவை கொடுமைப்படுத்துவதை நிறுத்தவில்லை. முன்பைவிட சமீப காலமாக மனைவியை பயங்கரமாக தாக்கி கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதை கண்டித்து ஷோபனாவின் சகோதரர், காவலர் ராஜ்குமார் பணிபுரியும் இடத்திற்கு சென்று தட்டிகேட்டுள்ளார்.


இனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டிற்கு வந்து தனது மனைவி ஷோபனனாவிடம் சண்டை போட்டு தாக்க தொடங்கியுள்ளார். அப்போது அவர்களின் 15 வயது மகனும் வீட்டில் இருந்துள்ளார். தந்தையை தடுக்க மகன் முயற்சி செய்த போதும் அது பலனளிக்கவில்லை. மகனையும் அவர் தாக்கியுள்ளார்.

அவர் கொடூரமாக தாக்கியதால் பயந்து போன மனைவி ஷோபனா வீட்டில் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஆத்திரத்தில் கணவர் ராஜ்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தந்தையை தடுக்க முயன்ற மகனும் இதில் காயமடைந்துள்ளார்.

மனைவி ஷோபானா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைந்த நிலையில், ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடினார். இதனை நேரில் பார்த்த சாட்சியான, மகன் காவல்துறையில் புகார் அளித்தார். மகனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறை ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.