கத்தியால் குத்தி கருவை கலைத்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

619

அமெரிக்கா..

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்கர் அல்வெஸ். இவருக்கும் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த லிவ் அப்ரு என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததால், இருவரும் லிவ் – இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த வாழ்க்கையில் கடந்த 2018 ஆண்டு லிவ் அப்ரு கருவுற்றுள்ளார். ஆனால், லில் அப்ருவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை தான் இல்லை எனவும், லிவ் அப்ரு வேறு நபருடன் உறவில் இருந்ததாலேயே கர்ப்பமடைந்ததாக அவரது காதலன் ஆஸ்கர் அல்வெஸ் கருதியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2018 மார்ச் 21-ம் தேதி நள்ளிரவில், இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அல்வெஸ் மற்றும் அவரது காதலி லிவ் அப்ரு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆஸ்கர் தான் வைத்திருந்த கத்தியைக்கொண்டு 26 வார கர்ப்பிணியாக இருந்த தனது காதலியை சரமாரியாக வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.

இங்கு லிவ் அப்ருவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கத்தியின் ஆழம் வயிற்றில் அதிகமானதால் கரு கலைந்து விட்டது.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான ஆஸ்கர் அல்வெஸை உடனடியாக சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஆஸ்கருடனான காதலை லில் அப்ரு முறித்துக்கொண்டார். ஆனால் இந்த வழக்கில் மட்டும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், கர்ப்பிணி காதலியை கத்தியால் குத்திய ஆஸ்கரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆஸ்கருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ஆஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.