கர்நாடகாவில் தமிழக பெண் மருத்துவர் மர்ம மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!!

426

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகர் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிந்து வருபவர் சிந்துஜா. சென்னையில் வசித்து வரும் இவருக்கு ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் சிந்துஜா நேற்று மருத்துவமனைக்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த மருத்துவமனை சக ஊழியர் லோகேஷ்வரி அவரின் வீட்டிற்கு நேரில் பார்க்கச் சென்றார்.

அப்போது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இறந்தவரின் பெற்றோர் சென்னையில் இருந்து வந்து புகார் கொடுத்த பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.