கல்லூரிக்கு போய் நல்லா படி பா.. அட்வைஸ் செய்த பெற்றோர்.. கோபத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

222

திருவள்ளூறில்..

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சரத் கண்டிகை பெஹனாயம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவர் கட்டிட தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (வயது 18).

பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன்,

துணை காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்திவேலுக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை.


வேலைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர்கள் அவரை கல்லூரிக்கு செல்ல வற்புறுத்தியதாக தெரிகிறது. விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.