கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணை கட்டாயப்படுத்தி ஒருநாள் முழுவதும் லாட்ஜூல் தங்கியிருந்த போலீஸ் : நடந்த விபரீதம்!!

632

திருப்பூரில்..

திருப்பூரில் கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற பெண்ணை மீட்டு, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் ஒருநாள் முழுவதும் தங்கியிருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற அவருடைய மனைவி,

அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை காவலர் முத்துப்பாண்டி, அந்த பெண் தமது கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்றதை கண்டுபிடித்தார்.


இதனையடுத்து அந்த பெண்ணை மீட்டு கணவரிடம் ஒப்படைக்காமல், அந்த பெண்ணை திருப்பூரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி அந்த பெண்ணுடன் ஒருநாள் முழுவதும் போலீஸ் ஏட்டு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், தலைமை காவலர் முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.