
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று விட்டு, டிரம்முக்குள் உடலை அடைத்து விட்டு, தப்பியோடிய மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராம். செங்கல்சூளை ஒன்றில் வேலைப் பார்த்து வந்த இவர்,
கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் டிரம்முக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதே சமயம் ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா மற்றும் 3 குழந்தைகளையும், வீட்டின் உரிமையாளரின் மகனான ஜிதேந்திராவையும் காணவில்லை என்பதால் அவர்களையும் தேடி வந்தனர்.
ஹன்ஸ்ராமின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததால் கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான தொழிலாளியின் மனைவி சுனிதாவும், ஜிதேந்திராவும் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஹன்ஸ்ராம், தனது மனைவியுடனும், குழந்தைகளுடனும் ஜிதேந்திரா வீட்டில் வாடகைக்கு குடி வந்துள்ளார். அப்போது ஜிதேந்திராவுக்கும், சுனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது.
சுனிதாவை மயக்கி ஆசை வலையில் விழ வைத்த ஜிதேந்திரா. நீண்ட நாட்களாக கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடியாக வெளியே சென்று ஹோட்டல் அறைகளில் தங்கியும் உல்லாசமாக இருந்து வந்தனர். ஹன்ஸ்ராம் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இருவரும் ஜோடியாக ‘ரீல்ஸ்’ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர். இதற்கு ஹன்ஸ்ராம் இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து,
உடலை பீப்பாயில் போட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தைகளை சுனிதா தனது பெற்றோரிடம் ஒப்படைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
மது குடிக்கும் பழக்கம் உள்ள ஹன்ஸ்ராமுக்கு ஜிதேந்திரா சம்பவத்தன்று மது வாங்கிக் கொடுத்துள்ளார்.
அவர் போதையில் இருந்த போது சுனிதாவும், ஜிதேந்திராவும் சேர்ந்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் நீல நிற பீப்பாயில் உடலை அடைத்து அதில் உப்பை கொட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டின் மேல்கூரையில் வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கோகுலாஷ்டமியையொட்டி அந்தப் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்க அக்கம்பக்கத்தினர் சென்று விட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை கள்ளக்காதல் ஜோடி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த தகவல்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.















