கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3 வயது மகன் கொலை.. நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி?

433

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். இவரது மனைவி ஜோதி ரத்தோர். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில்,ஜோதி ரத்தோருக்கு பக்கத்துவிட்டை சேர்ந்த இளைஞருடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி கணவர் வெளியூருக்கு சென்ற நிலையில் மனைவி பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது தனது தாயை காணாமல் தேடி வந்த 3 வயது உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான்.

இதனால் எங்கே தனது கள்ளக்காதல் விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடுவானோ என்று பயந்த ஜோதி, பெற்ற மகன் என்று கூட பாராமல் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.


ஆனால், குழந்தை கீழே தவறி கீழே விழுந்து விட்டதாக கணவர் உள்ளிட்டவர்களை நம்ப வைத்துள்ளார். மகன் இறந்த பிறகு ஜோதிக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்துள்ளன. இதனால் பயந்துபோன ஜோதி தனது கணவரிடம் சென்று மகனை தான் தான் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத கணவர் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாய் அவரது நண்பர் இருவரையும் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.