கள்ளக் காதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளக் காதலன் : நடந்த விபரீதம்!!

358

பாலியல் வன்கொடுமை..

கள்ளகாதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளகாதலனை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மோதி நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,

தான் கூலி வேலை செய்து வந்தபோது ஷெர்பூரில் வசிக்கும் விஷால் குமார் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடர்பு ஏற்பட்டதகாவும்,

பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை தனது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது விஷால்குமார் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியாதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார் அந்த சிறுமியின் தாயார்.


மேலும் விஷால்குமார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் ஆனால் பல மாதங்களாக வேலையில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள மோதி நகர் காவல்துறையினர்.

ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்சோ) பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விஷால்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.