காதலிக்காக மனைவி அடித்துக் கொலை : பின்னர் நடந்த விபரீதம்!!

518

பீகார்..

கள்ள காதலிக்காக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலம் சீத்தாமர்ஹியில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு புறம்பான ஒரு உறவில் ஈடுபட்டு வந்த கணவன் கள்ளக் காதலியை திருமணம் செய்து பின்னர் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சடலத்தை எரிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கொலையில் நடந்த சதி வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் பெண்ணின் உறவினர்கள் கொலை நடந்து இருப்பதாக சந்தேகம் எழுப்பிய நிலையில் கணவன் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் சீதாமர்ஹி நகரின் மெஹ்செளல் ஓபி பகுதியை சேர்ந்தவர் கரண் முகியா காயத்ரி என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சில காலம் மகிழ்ச்சியாக இருந்தனர், ஆனால் கடந்த சில மாதங்களாக கரண் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.


இந்நிலையில் குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். அதேநேரத்தில் கரணுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது, இதனால் மனைவியை வெறுக்க ஆரம்பித்தார் கரண், காதலியை கடைப்பிடிக்க எண்ணிய அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் காதலியை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் மனைவி காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் கணவன் கரண் முகியா உடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கணவன் கரண் தனது பெற்றோருடன் சேர்ந்து காயத்திரியை அடித்துக் கொலை செய்தார்.

பின்னர் மனைவி திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த அவர் அவசர அவசரமாக உடலை எரிக்க முயற்சித்தார். ஆனால் சந்தேகம் அடைந்த காயத்ரி தேவியின் குடும்பத்தினர் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினர், தங்களது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவர்கள் போலீசில் புகார் கூறினார், இதனால் கரண் முகியா மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகினர்.

காயத்ரியின் தாய்மாமா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார், அதைத் தொடர்ந்து கரணின் குடும்பத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். எனவே எரிக்கப்பட இருந்த இருந்தா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீத்தாமர்ஹியில் சதக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயத்ரி தேவியின் குடும்பத்தினர் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரண் குடும்பத்தைச் சார்ந்த ரோகித் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் கரண் மற்றும் அவரது தாய் தந்தையர் தலைமறைவாகிவிட்டனர். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.