காதலிக்க மறுத்த பெண்ணை குத்திக் கொன்ற சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

324

திருநெல்வேலி….

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தைம் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் சந்தியா . இவர் நெல்லையப்பர் கோவிலுக்கு அருகே உள்ள டவுன் கீழ ரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மேல்படிப்பை தொடரமுடியவில்லை. சம்பவத்தன்றும் வழக்கம்போல் காலை பணிக்கு வந்த சந்தியா, மதிய நேரத்தில் கடையில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்று இருந்தனர்.

இதனைக் கண்காணித்துக் கொண்டேஇருந்த மர்ம நபர் சந்தியாவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். சந்தியா கடைக்குள் சென்ற நிலையில் திடீரென கடைக்குள் புகுந்த அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தனது இருசக்கரத்தில் ஏறி தப்பி ஓடி விட்டார்.


இளம் பெண் இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கிடையே விசாரணையில், காதலிக்க மறுத்ததால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியை அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் அருகே பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.