காதலிக்க மறுத்த மாணவி.. நடு ரோட்டில் குத்திக் கிழித்த இளைஞன்.. நடந்த விபரீதம்!!

550

சென்னையில்..

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி, வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல கல்லூரி செல்வதற்காக மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞன் ஒருவன், மாணவியை பேருந்து நிலையத்தில் இருந்து ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

மாணவியிடம் அங்கு வைத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், மாணவியோ அவரை காதலிக்க முடியாது என ஒரேயடியாக மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு மாணவியின் முகம், கை, தலை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். மாணவி வலியால் அலறித் துடிக்கவே அருகிலிருந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்துள்ளனர்.


இதனைக் கண்ட அந்த இளைஞன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். படுகாயமடைந்த மாணவி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள குரோம்பேட்டை மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.

அதில், மாணவியை கத்தியால் வெட்டியது சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பது தெரியவந்தது. மாணவியை பல மாதங்களாக வசந்த் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், சில நாட்களாக காதலிக்கும்படி அதிகமாக தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று இறுதி முடிவை எதிர்நோக்கி காத்திருந்த வசந்த், காதலிக்க முடியாது என மாணவி கூறியதும் கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் இளைஞரை தேடி வருகின்றனர்.

சென்னை அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்களை தாக்குவதும், கொடூரமாக கொலை செய்வதுமான சைக்கோத்தனமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. க

டந்த ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை சதீஷ் என்ற இளைஞன் ரயிலில் தள்ளி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு அஷ்வினி என்ற பெண்ணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுபோல பல கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது மாணவி மீது நடந்துள்ள கொலை முயற்சி சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்கள் பாதுகாப்பாக பணிக்கு சென்று வருவதையும், மாணவிகள் கல்லூரிக்கு சென்றுவருவதையும் உறுதி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.