காதலுக்கு அழகு முக்கியம் இல்லை..! நிரூபித்துக் காட்டிய ஈரோடு பிரவீணா..!

852

மாற்றுச் சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சோளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரவீணா என்பவர் பி.காம். பட்டதாரி. இவர் ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த சஞ்சய் என்ற வேறு சாதி இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் பிரவீணாவை வீட்டு காவலில் அடைத்து வைத்து அவரது விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 11-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய பிரவீணா தாந்தோணிமலை காளியம்மன் கோவிலில் சஞ்சயை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி பிரவீனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சஞ்சயை கொன்றுவிட்டு பிரவீணாவை மட்டும் மீட்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து தப்பித்த பிரவீணாவும், சஞ்சயும், வேறு ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


இதனால் பிரவீணாவின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இனிமேலும் பொறுக்க முடியாது என முடிவு எடுத்த பிரவீணா தனது கணவருடன் சென்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு மனு அளித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அந்த மனுவில் எங்களின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், எனது கணவரை ஆணவக்கொலை செய்ய முயலும் எனது பெற்றோர் மற்றும் அவரை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினரை கேட்டுக்கொண்டார்.