காதல் தோல்வியால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

161

திருச்சி….

கரூா்-திருச்சி இடையே நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கரூரிலிருந்து வந்த ரயிலானது கோட்டை ரயில் நிலைய பகுதிக்கு வந்தபோது, திடீரென இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்துள்ளார்.

இதனை பார்த்து ரயில் என்ஜின் பணியாளா்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக, ரயில் முன்பாக பாய்ந்த நபரை தேடினா். அப்போது, அந்த இளைஞரின் சடலம் என்ஜின் பெட்டியுடன் மற்றொரு பெட்டியை இணைக்கும் பகுதியில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

தகவலின்பேரில், ரயில்வே பணிமனை ஊழியா்கள் விரைந்து வந்து என்ஜின் பகுதியில் சிக்கியிருந்த சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். தற்கொலை செய்துக்கொண்ட நபா் குறித்து ரயில்வே போலீசர் விசாரணை நடத்தினா்.


இவர், திருச்சி தென்னூா் வாமடம் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமார் (23) என்பதும், இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள அவா், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததும் தெரிய வந்தது.

காதல் தோல்வியால் மனமுடைந்து காணப்பட்ட பிரேம்குமார், சில நாள்களுக்கு மருத்துவ சிகிச்சையும் எடுத்துள்ளார். எனினும் விரக்தியில் இருந்த சூழலில், காதல் தோல்வி காரணமாக அவா் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.