காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம் : நடந்தது என்ன?

291

ஸ்ரீவில்லிபுத்தூர்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

தற்போது தனியார் நிறுவனத்தில் பிரகாஷ் பணிபுரிந்து வருவதாகவும் அவரது காதலியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவவதாகவும் அவர் வேலைக்கு செல்வதை விரும்பாத காதலன் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று காதலியுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்வதாக காதலரிடம் பெண் கூறியுள்ளார். இதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.


இதற்கிடையே பிரகாஷ் அவரது காதலி வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் பிரகாஷ் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகார் பற்றி விசாரிப்பதற்காக காதலன் பிரகாசை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணைக்கு வர சொல்லியுள்ளனர்.

விசாரணைக்கு வந்த பிரகாஷ் இளம்பெண்ணிடம் சென்று என் மீது புகார் கொடுப்பாயா என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல் நிலைய வளாகத்திற்க்குள்ளே காதலி முதுகில் குத்தினார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரகாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காயமடைந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணைக்கு வந்த இடத்தில் காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.