கிணற்றில் சடலமாக மிதந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி : நடந்த விபரீதம்!!

633

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கடுக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமிகாந்த் – ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற லட்சுமிகாந்த வீடு திரும்பவில்லை. டிசம்பர் 24-ம் தேதி அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் லட்சுமிகாந்த் சடலமாக மிதந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பெரணமல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் லட்சுமிகாந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜேஸ்வரியிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஸ்வரி செய்யாறு பகுதியில் உள்ள சிப்காட்டில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அங்கு வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மேலும் பணி முடிந்து வீட்டுக்கு வந்த பின்னரும் ராஜேஸ்வரி செல்போனில் நீண்டநேரம் உதயசூரியனுடன் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து லட்சுமிகாந்த் தனது மனைவி இராஜேஸ்வரியை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனை ராஜேஸ்வரி தனது கள்ளக்காதலன் உதயசூரியனிடம் கூறினார். கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் லட்சுமிகாந்தை தீர்த்து கட்டிவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.