விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாட்டையா என்ற மாரியப்பன் (60). இவரது மனைவி பரமேஸ்வரி (55).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பரமேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது கணவர் மாரியப்பனைக் காணவில்லை. இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மாரியப்பனை தேடி வருகின்றனர்.