குழந்தைக்கு நடக்க இருந்த ப ய ங் க ர ம்… தெய்வமாக வந்த நபர்… கடைசியில் நடந்த திருப்பம்..!

771

குழந்தை…….

‘’ஊறுக பிள்ளை உசுரை எடுக்கும்’’ என கிராமப் பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது குழந்தைகள் எப்போது தவழத் தொடங்குகிறதோ அப்போதே பெற்றோர்கள் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது இதன் அர்த்தம்.

குழந்தைகளை பத்திரமாக வளர்ப்பதே ஒரு கலை. கொஞ்சமும் தெரியாமல் காசை விழுங்குவது முதல், தூசிகளை, குப்பைகளை எடுத்துச் சாப்பிடுவதுவரை ஏதாவது அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழும் அபாயம் இதில் உண்டு. இங்கேயும் அப்படித்தான். ஒரு பெண் தன் குழந்தையை வாக்கரில் வைத்து நடக்க வைத்துக் கொண்டிருந்தார்.

திடீரென குழந்தை வாக்கரில் நடந்துகொண்டே வீட்டை விட்டே வெளியில் வந்தது. வாசலிலேயே தார்சாலை மிகவும் சறுக்கலாக இருக்க குழந்தை சறுக்கிக்கொண்டே வேகமாக சென்றது. கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்லும் அளவுக்கு பெரிய சறுக்கில் குழந்தை போய்க்கொண்டு இருந்தது.


திடீரென, அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் பைக்கை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் குழந்தையின் வாக்கரை நிறுத்தி பிள்ளையை எடுத்தார். பின்னாலேயே தாய் ஓடிவந்து குழந்தையை வாங்கினார். தெய்வம் போல் ஒருவர் வந்து காப்பாற்றினார் எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இதோ அதை அப்படியே கண்முன்னே காட்டுகிறது இந்த வீடியோ…