கைக்குழந்தையை விட்டு மாணவியுடன் ஓடிய ஆசிரியை : பேரதிர்ச்சியில் கணவன்!!

2600

தேனி..

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் பெரியகுளம் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் படித்து வந்திருக்கிறார். அதே கல்லூரியில் கைலாசப்பட்டியைச் சேர்ந்த தீபா என்பவர் ஆசிரியையாக இருந்த வந்துள்ளார்.

தீபாவுக்கு முத்துப்பாண்டி என்பவருடன் திருமணமாகி மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளது . ஆனாலும் தீபாவிற்கும் ஷாலினிக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டிருக்கிறது . அதன் பின்னர் தீபா ஷாலினியை கைலாசப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஷாலினியை தலைமுடி உடை என்று எல்லாம் மாற்றி ஆணாகவே அவரை மாற்றி இருக்கிறார். இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.


இந்த உறவு நீடிக்க ஷாலினியை தனது தம்பி ஆனந்துக்கு திருமணம் செய்து வைத்துவிட முடிவு செய்திருக்கிறார். திட்டமிட்டபடியே தனது தம்பி ஆனந்துக்கு ஷாலினியை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் ஷாலினியும் தீபாவும் நெருங்கி பழகுவது ஆனந்தக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதற்கு இடையில் தனது மனைவி ஷாலினியுடன் நெருங்கி பழகுவது கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார் தீபாவின் கணவர் .

இதனால் மூன்று மாத கைக்குழந்தையாக இருந்த குழந்தை தனக்கு பிறந்ததா அல்லது ஷாலினிக்கு பிறந்ததா என்ற சந்தேகமும் இருந்திருக்கிறது. இதனால் தீபாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் ஷாலினியுடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் தீபா. கணவரையும் கைக் குழந்தையையும் கைவிட்டு மாணவி ஷாலினி உடன் ஓடிப்போய்விட்டதால், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் தீபாவின் தந்தை.

போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்ததில் இருவரும் திருவாரூர் பகுதியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருவரையும் அவர் அவர் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது பிரிந்து செல்கிறோம் மீண்டும் நாங்கள் சேர்ந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள் தீபாவும் ஷாலினியும்.