கையில் மதுப்போத்தலுடன் இளைஞர்… கொரோனா வார்டில் அரங்கேறிய கூத்து…!

482

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பிரபல ரவுடி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கைவிலங்கோடு மது அருந்தும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

சாந்து குப்தா என்னும் ரவுடி ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றம் முன் ஆஜராகி சிறை செல்லும் முன் சாந்து குப்தாக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரவுடி சாந்து குப்தா அவர் தங்கியிருந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கைவிலங்கோடு மது ஊற்றி குடிப்பதும், அருகே பல வகையான உணவு பொருட்களும் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடிக்கு தடபுடலாக விருந்து என பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கொரோனா வார்டில் மது கொடுத்தது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. விசாரணையின் முடிவில் வெளிவந்த சாந்து குப்தா மது அருந்தும் புகைப்படம் உண்மை என தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு விருந்து அளித்தவர்கள் குறித்தான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.