கோபித்துக்கொண்டு போன மனைவி கர்ப்பம் : சந்தேகப்பட்ட கணவனை குத்தி கொன்ற மனைவி!!

515

கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் (36) – சுரேகா (30) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கூலி வேலை செய்து வந்த சந்தோஷ் குடும்பத்துடன் நாயக்கன் தோப்பு பகுதியில் உள்ள ராசாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.

தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வரும் சந்தோஷ் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தினமும் சண்டை போடுவது வழக்கம். இதனால், சென்னையில் உள்ள தனது தாய் வீட்டில் பிள்ளைகளை சுரேகா தங்க வைத்துவிட்டு நாயக்கன் தோப்புக்கு வந்துள்ளார்.


இதனிடையே, சுரேகா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். ஏற்கனவே மனைவி சுரேகாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்த சந்தோஷ் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சண்டை வெடிக்க தொடங்கியது.

மேலும், கர்ப்பத்தை கலைத்துவிடு எனக்கூறி சுரேகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார் சந்தோஷ். இந்நிலையில், கடத்த புதன்கிழமை அன்று மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சந்தோஷ் காய்கறி நறுக்கும் கத்தியால் சுரேகாவை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, சுரேகா கத்தியை பிடுங்கி சந்தோஷை வயிறு மற்றும் மார்பு பகுதியில் சராமரியாக குத்தி படுகொலை செய்தார். சம்பவ இடத்திலேயே கணவர் சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மனைவி சுரேகா சரணடைந்தார். விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த சந்தோஷின் உடலை மீட்டு,

பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.