சாக்லேட்டுக்காக ப்ரிட்ஜை திறந்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் : எச்சரிக்கை செய்தி!!

326

தெலங்கானாவில்….

தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க ஃப்ரிட்ஜை திறக்க முயன்ற 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நவிபேட் கிராமத்தில் வசித்து வரும் சேகர், சம்யுக்தா தம்பதியின் 4 வயது மகள் ரித்திஷா . இவர் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன் அவருடைய தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங்கிற்கு கூட்டிச் சென்றார்.

அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டில் போய் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம் என அங்கே அழைத்துச் சென்றார். அப்போது கடையில் உள்ள ​​ஃப்ரிட்ஜில் இருந்த சாக்லேட்டை எடுக்க சிறுமி ரித்திஷா முயற்சித்தார். திடீரென எதிர்பாராதவிதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாள். உடனடியாக தந்தை சேகர் சிறுமியை காப்பாற்றினார்.


சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு முதலுதவி அளித்து நிஜாமாபாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் உயிரிழந்ததுஇதையடுத்து குழந்தையின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நீதி கிடைக்கும் வரை இடத்தை விட்டு நகரமாட்டோம் என உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உரிமையாளர் பதில் அளிக்காததால், சூப்பர் மார்க்கெட் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.