சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவிய 9ம் வகுப்பு மாணவி சரிந்து விழுந்து மரணம்!!

134

மதியம் உணவு இடைவேளையின் போது, தன்னுடைய மதிய உணவை சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீலட்சுமி, திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், முறிக்காசேரி பகுதி, தோப்பிரம்குடியில் இன்று மதியம் சாப்பிட்டு விட்டு, தான் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவி திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

பள்ளி நகரைச் சேர்ந்த மாங்காட்டுகுன்னல் என்பவரின் மகள் ஸ்ரீலட்சுமி, தங்கமணியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் தனது வீட்டில் 2 மணியளவில் மதிய உணவுக்குப் பிறகு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது அவர் சரிந்து விழுந்தார்.

உடனடியாக முறிக்காசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஸ்ரீலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.