சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர்… இறப்பிலும் 5 பேருக்கு மறுவாழ்வு தந்து நெகிழ்ச்சி!!

85

தேனியில்..

தேனி மாவட்டம், சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர், மூளை சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

தேனி, கம்பம் பகுதியில் வசித்து வருபவர் மணிவாசகம். கல்லூரி மாணவரான இவரது மகன் பரத்குமார் கடந்த நவம்பர் 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

உடனடியாக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் பரத்குமார் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சம்மதம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, மருத்துவ குழுவினர் மூளைச்சாவு அடைந்தவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் இதயம் அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்பட்டு சென்னை மற்றும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுநீரகம் ஆம்புலன்ஸ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல், இதயமும் ஆகியவை விமானம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் மூன்று போருக்கு தானமாக கொடுத்ததின் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.