சுக்குநூறாக உடையும் மயில்சாமியின் குடும்பம்.. பின்னால் இருந்து வேலை பார்த்தது மாமியாரா? குழப்பத்தில் ரசிகர்கள்!!

28665

மயில்சாமியின்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி ரசிகர்கள் பலரின் இதயங்களை கொள்ளை கொண்டவராக பார்க்கப்படுகின்றார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் சிவ வழிபாட்டை செய்து விட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த மறைவு திரையுலகில் இருக்கும் பலரின் நெஞ்சங்களை உருக்கியது என்று கூட சொல்லலாம்.

இந்த நிலையில் மயில்சாமி இறந்து நான்கு மாதங்கள் ஆகின்ற நிலையில் அவரின் வீட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் சினிமாவில் நாயகர்களாக இருந்து வருகிறார்கள். இருவருக்குமே சினிமா பிரபலங்கள் மத்தியில் மயில்சாமி திருமணம் செய்து வைத்துள்ளார்.


திருமணத்திற்கு பின்னர் வீட்டில் சில சில பிரச்சினைகள் இருந்துள்ளது ஆனால் மயில்சாமி இதனை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. மேலும் மயில்சாமியின் மனைவியுடன் மருமகள்கள் இருவரும் சண்டையிட்டு கொள்வார்களாம். இதனை மயில்சாமியிடம் அடிக்கடி கூறியதோடு அவர் இதனை வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே வைத்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது இருவரின் மனைவிமார்களும் நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு பதிவு செய்துள்ளார்களாம். இந்த விடயம் அவர்களின் உறவினர் வாயிலாக வெளியில் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள்,“ இதற்கு தான் வீட்டில் ஒரு பெரிய மனுஷர் வேண்டும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.