சென்னை..

சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சிறுமியின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆன்லைன் படிப்பிற்காக அவர்களது கைகளில் பெற்றோர்களே செல்போனை கொடுக்க நிர்பந்தம் ஏற்பட்டு,

தற்போது அந்த செல்போனைகள் இல்லாமல் அவர்களுக்கு பொழுதே போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறைக்கு கேம்ஸ்களும், இன்ஸ்டாகளும் அவர்களை அடிமையாகி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை, வடபழனி கங்கை அம்மன் முதல் தெருவை சேர்ந்தவர் உபாமதி. இவரது மனைவி சரிதா. இவர்களின் 13 வயதான மகள் அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து, வடபழனி போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சிறுமி செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் பெற்றோர், செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டனர். இதனால் மனமுடைந்த ஜனனி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.















