தந்தையை அடித்தே கொன்ற மகன் : கொலையை மறைக்க மகனும் தாயும் அரங்கேற்றிய நாடகம்!!

219

தேனியில்..

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (48).

இந்த தம்பதிக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற இரண்டு மகள்களும், காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இருவரும் வெளியூர்களில் கணவர் வீட்டாருடன் வசித்து வருகின்றனர்.

காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காளிதாஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். முனியாண்டி மது போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு ஈடுபட்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.


அதேபோல நேற்று முன்தினமும் இரவு முனியாண்டி மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் போதை தலைக்கேறிய நிலையில் மனைவி முருகேஸ்வரி மற்றும் மகன் காளிதாஸ் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவர் மகன் காளிதாசை கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த காலிதாஸ் முனியாண்டியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். கீழே சென்று பலமாக விழுந்ததில் முனியாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் சம்பவ இடத்திலேயே முனியாண்டி பலியானார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேஸ்வரி மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் கொலையை மறைத்த திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது சுமார் இரவு 12 மணியளவில் முனியாண்டியின் சடலத்தை கொண்டு வந்து வீட்டின் முன்பாக சாலையில் வைத்துள்ளனர்.

அதன் பின்னர் கத்தி பூச்செலிட்டு மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து விட்டதாக அலறி உள்ளனர்.அந்த அளவில் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது முனியாண்டி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து கண்டமனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்து முனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முனியாண்டியில் மனைவி மற்றும் மகன் கொடுத்த தகவலின் பெயரில் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால் விசாரணையில் முனியாண்டியை கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் இல்லை என தெரிய வந்துள்ளது. அதன் காரணத்தாலேயே காவல்துறையினருக்கு மனைவி முருகேஸ்வரி மீதும் மகன் காளிதாஸ் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை அடுத்து இருவரையும் கண்டமனூர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அவர்கள் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் காவல் துறையினரின் கிடக்கு பிடி விசாரணையில் முனியாண்டியை கொலை செய்துவிட்டு நாடகம் பாடியது அம்பலமானது. அவர்கள் இருவரும் அந்த கொலையை ஒப்புக்கொண்ட பின்னர் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  தந்தையை கொன்றுவிட்டு மகனும் தாயும் சேர்ந்து நாடகமடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.