தமிழகத்தில் ஒரே நாளில் இரு மாணவிகளுக்கு நேர்ந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

610

கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவந்திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். கூலி தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (வயது 19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக பென்சி கடும் மன உளைச்சலில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் பென்சி பேசிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்று விட்டார்.


வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவருடைய தாயார் பென்சியை எழுப்ப சென்று கதவை தட்டினார்.

ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பென்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இவரது மகள் வயது 16 குடியாத்தத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது பெற்றோர் குடியாத்தத்தில் உள்ள மருத்தவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர் அந்த மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் மாணவிக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் அந்த மாணவிக்கு ஸ்கேன் எடுத்துள்ளனர் அந்த ஸ்கேன் ரிப்போர்டில் 7 மாத கர்ப்பம் என வந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்,

அந்த மாணவியிடம் விசாரித்தபோது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலால் கர்ப்பமானது தெரிய வந்தது இதனை தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர்கள் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியின் மேற்பார்வையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரனையில், குடியாத்தம் அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேகர் (55) சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.