தாய்க்கு பயந்து 8ம் வகுப்பு சிறுமியின் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

727

சென்னை..

சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் 37 வயதான முருகன்.இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி 32 வயது புனிதா .இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 12 வயதில் சர்மி என்ற மகளும், 6வயதில் கமலேஷ் என்ற மகனும் உள்ளனர். சர்மி 8ம் வகுப்பும், கமலேஷ் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த சர்மி, தனது தந்தைக்கு போன் செய்து, ‘தம்பி சரியாக படிக்கவில்லை.

அவனை நான் அடித்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார். பணிமுடிந்து இரவு முருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மகள் சர்மி புடவையால் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சர்மியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்மி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சர்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தனது தம்பியை அடித்ததால், தனது தாயார் வந்து தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் முதல் கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயார் அடிப்பாரோ என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.