திருமணமான 3 மாதத்தில் 2ஆம் கணவரை பிரிந்து மாயமான பணக்கார இளம்பெண்! 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

267

இந்தியாவில் இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில்.

இவர் முதல் கணவரை 2016ல் விவாகரத்து செய்தார், பின்னர் இரண்டாவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மணந்த நிலையில் மூன்று மாதங்களில் அவரை பிரிந்தார். பின்னர் வீட்டிலிருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா மாயமானார்.

இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த அகிலா உறவினர்களை சந்தித்து விட்டு ஹொட்டல் அறையில் தங்கியிருந்தார்.

அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார், அகிலா சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் சம்பவ இடத்துக்கு விசாரணையை தொடங்கினர்.


அவர்கள் கூறுகையில், விவாகரத்துக்கு பின்னர் நகைகள், பணத்துடன் சென்ற அகிலா சமீபத்தில் ஊர் திரும்பிய போது மிகவும் பலவீனமாக காணப்பட்டுள்ளார். இதோடு அவரிடம் பணம், நகைகள் எதுவும் இல்லை. அவர் தற்கொலை குறித்து உறவினர்கள் யாருமே புகார் கொடுக்கவில்லை, நாங்களாக விசாரிக்கிறோம்.

அகிலாவின் தந்தை பணக்காரர் ஆவார், நல்ல நிதி நிலையில் இருந்ததால் தான் அவருக்கு அவ்வளவு பணம், நகைகள் கிடைத்துள்ளது. இந்த நான்கு ஆண்டில் காசர்காட், கோழிக்கோடு, ஆலப்புழா போன்ற பல இடங்களுக்கு அகிலா சென்றிருக்கிறார்.

இங்கெல்லாம் யாருடன் சென்றார், எப்படி சென்றார் என தெரியவில்லை. அகிலா உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம், விரைவில் இந்த சம்பவத்தின் உண்மைகள் வெளிவரும் என கூறியுள்ளனர்.