செங்கல்பட்டு..

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி சம்பவத்தன்று மாம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் மணமக்களுக்கு reception ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இருவீட்டாரும் அங்கே வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் என சிலர் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது, மேடையில் மணமகன் சுர்ஜித், போதையில் மணமகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மணமகள் குடும்பத்தார், உறவினர்களிடமும் மேடையில் வைத்து அநாகரிமாக பேசி ந்டந்துகொண்டுள்ளார்.

இதனால் பொறுமை இழந்த பெண் வீட்டார், ரிசெப்ஷனை பாதியில் நிறுத்தி விட்டு, சுர்ஜித்தை வசைபாட தொடங்கினர். அதோடு இதுகுறித்து அந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட பெண் வீட்டார், மாப்பிள்ளை மீது புகாரும் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள், மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாப்பிள்ளை ‘நான் செய்தது தவறு.. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். அதோடு மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து போட்ட தங்க வாட்ச், மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்டவையை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

மேலும் இதுபோன்ற ஒருவருக்கு எங்கள் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்து வைக்க முடியாது என்று திருமணத்தையும் நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.















