தோழியை கண்முன்னே கூலிப்படையை ஏவி பெண் செய்த மோசமான செயல்!!

1580

தெலுங்கானா….

தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த காயத்திரி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.காயத்ரி ஏற்கனவே திருமணமாகி முதல் கணவனை பிரிந்து ஸ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இருவரும் கொண்டாப்பூரில் உள்ள ஸ்ரீராம்நகர் காலனியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், காயத்திரியின் கணவர் ஸ்ரீகாந்த் UPSC தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வரும்போது ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த சூர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 25 வயது இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நண்பர்களாக பழக தொடங்கினர். மேலும், ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரிக்கும் சூர்யாவிடம் பழக தொடங்கினார். கால போக்கில் கணவனின் தோழி நமக்கும் நெருக்கமாக இருக்கிறார் என்ற நினைத்த காயத்ரி அடிக்கடி சூர்யாவை வீட்டுக்கு வரவழைத்து நட்பை வளர்த்து வந்துள்ளார்.


இந்த நிலையில், காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அப்போது, காயத்ரியை அவரது வீட்டிலேயே தங்கி சூர்யா பார்த்துக்கொண்டார். அந்த நேரங்களில் சூர்யாவும் காயத்ரியின் கணவர் ஸ்ரீகாந்தும் வீட்டுக்குள்ளேயே UPSC தேர்வுக்கு ஒன்றாக படித்து வந்ததுடன், இருவரும் ஒன்றாக பயிற்சி மையத்துக்கு சென்று வந்துள்ளனர்.

இதை கவனித்து வந்த காயத்ரிக்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட தொடங்கியது. தனது கணவனை சூர்யா அபகரிக்க முயற்சிப்பதாக சந்தேகித்து அதுகுறித்து இளம்பெண்ணிடம் காயத்ரி கேட்டுள்ளார். இதையடுத்து ஸ்ரீக்நாத்தின் வீட்டுக்கு செல்வதை சூர்யா நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், காயத்ரி சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் ஆதிர்ச்சியடைந்த சூர்யா, எதற்காக என் மீது புகார் கொடுத்தீர்கள் என காயத்ரியிடம் முறையிட்டுள்ளார். பின்னர் அந்த புகாரை காயத்ரி வாபஸ் பெற்றுள்ளார். இதனை அடுத்து சமாதானம் பேச வேண்டும் எனக்கூறி கடந்த 26 ஆம் தேதி சூர்யாவை காயத்ரி வீட்டுக்கு அழைத்தார்.

அதனை ஏற்று சூர்யாவும் காயத்ரியின் வீட்டுக்கு சென்றார். வீட்டின் படுக்கையறைக்குள் சென்றபோது அங்கு 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் இருப்பதை பார்த்து சூர்யா அதிர்ந்து போனார். அவர்கள் யார் என சூர்யா கேட்டபோது, என் கணவனிடம் இனி பேசவே கூடாது என மிரட்டிய காயத்ரி அறையின் கதவை பூட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்த 6 இளைஞர்கள் இளம்பெண் சூர்யாவை மாறி மாறி கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர்.

அதை அந்த அறைக்குள்ளேயே இருந்தபடி காயத்ரி வீடியாவும் எடுத்துள்ளார். ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்துவிட்ட காயத்ரி ‘ இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் இனி என் கணவனிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியதுடன் சூர்யாவின் பிறப்புறுப்பில் அடித்து தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியே வந்த சூர்யா கச்சிபோலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் காயத்ரியை கைது செய்து விசாரித்த சைபராபாத் காவல்துறையினர் அவர் கொடுத்த தகவலின் பேரில் இளம்பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்த விஷ்ணுவர்தன் (22), மனோஜ்குமார் (22), சையது மஸ்தான் (25), ஷேக் முஜாஹித் (25), ஷேக் மவுலாளி (32) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவனிடம் பழகியதால் சந்தேகமடைந்து கூலி படை ஏவி தோழியை கூட்டு வன்கொடுமை செய்ய வைத்த பெண்ணின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.