நடிகை குஷ்பு……..
நடிகை குஷ்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து பேண்டெய்ட் போட்டிருக்கும் புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த புகைப்படத்தினை பார்த்ததும் ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.
அவர் கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் காரணமாக சில நாட்கள் டிவிட்டரில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார். இதேவேளை, ரசிகர்களை கவனமாக இருங்கள்,
வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தூரத்தை பின்பற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance. ❤ pic.twitter.com/K7d5plvsym
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 19, 2020