நாயுடன் உடலுறவு கொண்ட வாட்ச்மேன்… பள்ளிக் கூடத்தில் நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன போலீஸ்!!

395

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியின் அருகே குடியிருப்புகளும் உள்ளன. குடியிருப்பில் இரவு நேர காவலாளியாக 30 வயதான நபர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளியில் உள்ள செக்யூரிட்டி அறையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு நாய் ஒன்றுடன் அந்த காவலாளி இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளியில் அந்த நேரம் ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று அவர் நினைத்துள்ளார். ஆனால், பள்ளி பகுதிக்கு வந்தவர்கள் எதிர்பாராத விதமாக நாயுடன் காவலாளி உடலுறவை கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இதுதொடர்பாக உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. வினோதமான இந்த புகாரை படித்துப் பார்த்து அதிர்ந்துபோன காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட காவலாளிக்கு எதிராக விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு முரணான குற்றங்களில் ஈடுபடுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காவலாளியை குடியிருப்பு வாசிகள் உடனடியாக பணியிலிருந்து நீக்கிவிட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ரிக்‌ஷா தொழிலாளி ஒருவர் நாயை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது இயற்கைக்கு மாறான குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விலங்குகள் நல அதிகாரியின் நடவடிக்கையின் பேரில் அந்த நாய்க்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதேபோன்றதோரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.