நீரில் இருந்த பாம்பை துன்புறுத்திய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்! சமூக வலைதளத்தில் பரவும் காணொளி!!

613

இளைஞர்…

நீரிலுள்ள பாம்பை இளைஞர் ஒருவர் அதன் வாலைப் பிடித்து இழுக்கும்போது, அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம் நிறைந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The unexplained என்ற ட்விற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த காணொளியில், இளைஞர் ஒருவர் நீரிலுள்ள பாம்பை இழுத்து துன்புறுத்துகிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக பெரிய மலைப்பாம்பு ஒன்று மேலிருந்து இளைஞரை நோக்கி பாய்ந்து சீறிக்கொண்டு வருகிறது.


பயத்தில் பாம்புடன் சேர்ந்து இளைஞரும் நீரில் விழுகிறார். ’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழிக்கேற்ப அமைதியாய் இருக்கும் பாம்பை துன்புறுத்தி இரண்டு பாம்புகளுடன் நீருக்குள் விழுந்து சிக்கிக்கொண்ட இளைஞருக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ என்று பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.